மேற்குவங்கம்: குடியுரிமை சட்டத்திருத்தம் தேவையா என்பது பற்றி மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையா என்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி யோசனை அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மாமன்ற கண்காணிப்பில் இந்தியாவில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த மம்தா கோரியுள்ளார்.