×

சாலையோர வாகனங்களில் ஒரே மாதத்தில் 30 பேட்டரி திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு வலை

சென்னை: சென்னை கே.கே.நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் மினிவேன் மற்றும் ஆட்டோக்களில் பேட்டரிகள் மாயமாகி வருகிறது. குறிப்பாக, முனுசாமி சாலை, லட்சுமிபதி சாலை, அண்ணா சாலைகளில் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் பேட்டரிகள் திருடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் பேட்டரிகள் மட்டும் மாயமாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கே.ேக.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் எவரையும் கைது செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  அதேநேரம் போலீசார் தொடர் திருட்டு நடைபெறும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags : battery thefts , Roadside vehicles, battery theft
× RELATED சாலையோர வாகனங்களில் ஒரே மாதத்தில் 30...