பாட்னா: கடந்த 1997ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை லாலு பிரசாத் யாதவ் தொடங்கினார். அப்போது முதல் அதன் தலைவராக அவர் இருந்து வருகிறார். தற்போது, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ராஞ்சி சிறையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ேநற்று நடந்தது. இதில், 11வது முறையாக கட்சித் தலைவராக லாலு தேர்வு செய்யப்பட்டார்.