சென்னை: சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் ஜி.எஸ்.டி. வரி ரூ.35 கோடிக்கு கணக்கு காட்டிய புகாரில் இம்ரான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் ரூ.6.34 கோடி வரி ஏய்ப்பு செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதால் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.