சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணாமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. சுற்றிலும் உள்ள சிறு சிறு ஏரிகளும் நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள், மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.