சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.