திருவனந்தபுரம்:கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள கனகமலை வனப்பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் ரகசிய கூட்டம் நடத்தி கேரளா, தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி செய்வதாகடெல்லி என்ஐஏ அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சி என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரகசிய கூட்டம் நடத்திய கோழிக்கோடு, மன்சீத்(30), சேலக்கரை சாலிஹ் முகமது (29) கோவை ராஷித் அலி (27), கோழிக்கோடு குற்றியாடி ரம்சாத் (27) மலப்புரம் திரூர் ஷாப்வான்(26) காசர்கோடு 9காஞ்ஞங்காட்டை சேர்ந்த மொய்னுதீன் (28) ஆகியோரை கைது செய்தனர். கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் மன்சீத், சாலிஹ் முகமது ராஷித் அலி. ரம்ஷாத், ஷாப்வான், மொய்னுதீன் ஆகிய 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நேற்று 6 ேபருக்கும் சிறைதண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.