×

தாம்பரம் அருகே பிரசவத்தின்போது குழந்தை இறப்பு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (30). இவரது மனைவி லோகேஸ்வரி (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு காலை 5.45 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டுள்ளது. அப்போது குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த ஸ்ரீராம் மற்றும் அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், ‘மருத்துவர்களின் தவறான சிகிச்சையே குழந்தை இறப்புக்கு காரணம். எனவே, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

மேலும், பணியில் இருந்த மருத்துவர் பால்பாண்டி (30) என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பால்பாண்டி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இருதரப்பினரையும்  காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார்  காவல்நிலையத்தில் வைத்து அவர்களை சமாதானம்  செய்தனர்.பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags : Relatives ,childbirth , Tambaram, childbirth,. Infant mortality, hospitalization, siege of relatives
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...