×

தியாகதுருகம் புறவழிச்சாலையில் வெள்ளை கோடுகள் வரையும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் வெள்ளை கோடுகள் கொண்ட வைப்ரேட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை தியாகதுருகம் புறவழிச்சாலையில் கடந்த சில மாதங்களாக பெரும் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. இவ்விபத்துகளை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலை துறையும் மாவட்ட காவல் துறையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வளைவு பகுதியில் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேம்பாலம் இறங்கும் வழி முடிவில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் மெதுவாக செல்வதால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

இருப்பினும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலங்களில் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் மின் விளக்குகள் இல்லாத இடத்தில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sacristy , Sacrifice is the outlet, white lines
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு