×

வெப்பசலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 2 சென்டி மீட்டர் மழையும், கடலூர், பாம்பன், புதுச்சேரி, பாநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன.

Tags : rainfall ,districts ,Tamil Nadu ,warming ,veppacalanam ,Meteorological Department Moderate ,Observatory , Thermostat, Meteorological Center, Cuddalore, Kanyakumari, Villupuram
× RELATED இன்றும் பல மாவட்டங்களில் வெயில்...