×

250வது கூட்டம் மாநிலங்களவை தொடரை சிறப்பாக நடத்த திட்டம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வரும் 17ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி, டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இது, மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடராகவும் விளங்குகிறது. மேலும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பை அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டதின் 70ம் ஆண்டு தினமும் இணைந்து வருகின்றன.

இதனால், இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக, மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் 17ம் தேதி டெல்லியில் உள்ள வெங்கையா நாயுடு இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

Tags : session ,Rajya Sabha ,Host , 250th Meeting, Rajya Sabha
× RELATED அமேதியில் போட்டியிட ராகுல்...