சென்னை: உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உதவியின்றி தாங்களே ஆஜராகி வாதாடுவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞரின்றி வாதாடுவோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி நியமிக்கும் குழுவிடம் அனுமதி பெற்ற பிறகே ஒருவர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட முடியும். வழக்கறிஞரின்றி வாதாடுவதற்கு என்ன காரணம் என்பதை உயர்நீதிமன்ற குழுவிடம் தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.