×

விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் காசோலை வழங்கினார்

சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமை செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 4வது உலக கோப்பை வளையப்பந்து (டென்னிகாய்ட்) வாகையர் போட்டியில் குழு போட்டிகளில் ஆடவர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற 3 வீரர்கள், மகளிர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற 2 வீராங்கனைகள் ஆகியோருக்கு தலா 10 லட்சத்துக்கான செக்கையும், 2018ம் ஆண்டிற்கான சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற செல்வன் டி.குகேஷ்க்கு ₹3 லட்சத்துக்கான செக்கையும், சென்னையில் தேசிய அளவிலான வளைகோல்பந்து வாகையர் விளையாட்டு போட்டிகளை நடத்திய ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளுக்கு 10 லட்சத்துக்கான செக்கையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags : Chief Minister ,athletes , Athletes, CM, Check
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...