ஈரோடு: ஈரோட்டில் உள்ள அன்னை இன்ஃப்ரா டெவலப்பர் கட்டுமான நிறுவனத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.ரூ. 450 கோடி ஜி.எஸ்.டி வரி மோசடி தொடர்பாக ஏற்கனவே அன்னை இன்ஃப்ரா டெவலப்பர் உரிமையாளர் அசோக் குமார் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் அன்னை இன்ஃப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.