சென்னை : சென்னை தாதங்குப்பத்தில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை கோயம்பேடு வந்த அரசு பேருந்து தாதங்குப்பத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காயமடைந்த 13 பெரும் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.