ஈரோடு: ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்குமார் ஜிஎஸ்டி மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கட்டுமான பொருட்களை தயாரிக்கும் அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.