×

பெண் கொலையில் மூவர் சரண்

பெரம்பூர்: புளியந்தோப்பு குருசாமி நகர் 5வது தெருவை சேர்ந்த சுப்ரியா(32), இரு தினங்களுக்கு முன்பு இரவு மர்ம கும்பலால்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பேசின்பிரிட்ஜ் போலீசார் கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே சுப்ரியாவின் கபெரம்பூர்: புளியந்தோப்பு குருசாமி நகர் 5வது தெருவை சேர்ந்த சுப்ரியா(32),
இரு தினங்களுக்கு முன்பு இரவு மர்ம கும்பலால்  வெட்டிப் படுகொலை
செய்யப்பட்டார். பேசின்பிரிட்ஜ் போலீசார் கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே சுப்ரியாவின் கணவர் ரூபன் கைது
செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு குருசாமி நகர்
பகுதியை சேர்ந்த ராம்கி (எ) ராம்குமார்(28), டேவிட்(20) மற்றும் 17 வயது
சிறுவன் ஆகிய 3 பேரும் பேசின்பிரிட்ஜ் காவல்நிலையத்தில் சரணடந்தனர். மேலும்
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சுதர்சன், பிரேம்குமார், தினகரன்
உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட
விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுப்ரியாவின் கணவரான ரூபனின் அண்ணன் ரமேஷ்
(எ) நாய் ரமேஷை கடந்த ஆண்டு மர்ம கும்பல் புளியந்தோப்பில் வைத்து வெட்டிக்
கொன்றது. இதில் சுப்ரியா மூளையாக செயல்பட்டுள்ளார். மேலும் அவரது கொலை
வழக்கில் சுப்ரியா சாட்சி சொல்லாமல் இருந்து வந்துள்ளார். புளியந்தோப்பு
பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது தொடர்பாக சுப்ரியாவுக்கும்
அவரது கணவரான ரூபனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படி
பல்வேறு வகையில் சுப்ரியா, ரூபன் மற்றும் ரூபனின் அண்ணன் தம்பிகளுக்கு
தொல்லை கொடுத்து வந்ததால் சுப்ரியாவை தீர்த்து கட்டினோம் என கைதானவர்கள்
போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து
பேசின்பிரிட்ஜ் போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.ணவர் ரூபன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு குருசாமி நகர் பகுதியை சேர்ந்த ராம்கி (எ) ராம்குமார்(28), டேவிட்(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் பேசின்பிரிட்ஜ் காவல்நிலையத்தில் சரணடந்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சுதர்சன், பிரேம்குமார், தினகரன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுப்ரியாவின் கணவரான ரூபனின் அண்ணன் ரமேஷ் (எ) நாய் ரமேஷை கடந்த ஆண்டு மர்ம கும்பல் புளியந்தோப்பில் வைத்து வெட்டிக் கொன்றது. இதில் சுப்ரியா மூளையாக செயல்பட்டுள்ளார். மேலும் அவரது கொலை வழக்கில் சுப்ரியா சாட்சி சொல்லாமல் இருந்து வந்துள்ளார். புளியந்தோப்பு பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது தொடர்பாக சுப்ரியாவுக்கும் அவரது கணவரான ரூபனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வகையில் சுப்ரியா, ரூபன் மற்றும் ரூபனின் அண்ணன் தம்பிகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததால் சுப்ரியாவை தீர்த்து கட்டினோம் என கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேசின்பிரிட்ஜ் போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post பெண் கொலையில் மூவர் சரண் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Supriya ,5th street ,Pulianthoppu Kuruswamy Nagar ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...