சென்னை: குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் ஒன்றும் ஒரு விஞ்ஞானியின் கோணத்தில் கேள்வி கேட்கவில்லை, சாதாரண அறிவு கொண்ட சாமானியனாகத்தான் என்னுடைய சந்தேகத்தை கேட்டேன் எனவும் கூறியுள்ளார்.