×

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 5 கோடி மதிப்பு சொத்தை எழுதி வைப்பதாக தமிழக பக்தர் அறிவிப்பு

ஸ்ரீகாளஹஸ்தி: சென்னை அடுத்த மீஞ்சூர்  பகுதியை சேர்ந்தவர் வி.ஆர்.பகவான். இவருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உள்ளனர்.இவர்  தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டார்.
மேலும், மீஞ்சூர் பகுதியில் தனக்கு சொந்தமான 5 கோடி மதிப்புள்ள சொத்தை காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு எழுதி வைக்க முடிவு செய்து கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், நிர்வாக அதிகாரி சந்திரசேகர்  தலைமையிலான அதிகாரிகள் நேற்று மீஞ்சூர் சென்று பகவானை சந்தித்து பேசினர். அப்போது, பகவான், விரைவில் தனக்கு சொந்தமான 5 கோடி மதிப்புள்ள சொத்தை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு உயில் எழுதி கொடுப்பதாக  உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சொத்தை பார்வையிட்டனர்.

Tags : devotees ,Tamil Nadu ,Srikalahasti Shiva Temple , Devotees of Srikalahasti Shiva Temple, Property, Tamil Nadu
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...