சண்டிகர்: பாஜக ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு சுயேட்சை வேட்பாளர்கள் கட்டாய படுத்தப்படுகிறார்கள். ஜனநாயக விரோத செயல்களில் பாஜக ஈடுபடுகிறது என ஹரியானா முன்னாள் முதல்வர் டி.எஸ்.ஹூடா புகார் தெரிவித்துள்ளார். யாருக்கும் ஆதரவு என்பதை சுயேட்சைகளே சுதந்திரமாக முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.