×

ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன் மீது வழக்குப்பதிவு

வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் செல்போன் வைத்திருந்ததாக முருகன் மீது பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று நடந்த சோதனையில் முருகன் அறையில் இருந்து செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டன. சிறைத்துறை விதிமுறைகளுக்கு புறம்பான பொருள் வைத்திருந்ததாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Rajiv ,Murugan , Rajiv Murder, Vellore, Central Prison, Murugan, Prosecution
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...