அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் கடந்த 14.11.2003ம் ஆண்டில் தண்ணீர் லாரி மோதியதில், திரிசூலத்தை சேர்ந்த காளிதாஸ் (35), பெரம்பூரை சேர்ந்த ராஜா (35), அதே பகுதியை சேர்ந்த சிவா (25) ஆகிய மூவர் பலியாகினர். இதுகுறித்து, வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய அயனாவரத்தை சேர்ந்த டிரைவர் மனோகரன் (32) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, ‘‘விபத்து ஏற்படுத்தி 3 பேர் இறப்புக்கு காரணமான டிரைவர் மனோகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.