சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக, பாஜக சார்பில் யாரும் எந்தவித கருத்து வேறுபாடுகளையும் கூறவில்லை என்றும் மாநில பாஜகத் தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம் தான் பேச முடியும் என்றும் அவர் கூறினார்.