×

டோல்கேட் துப்பாக்கிச்சூடு இருவருக்கு ஜாமீன்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் கடந்த ஆக.29ம் தேதி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவுடி தனசேகரன் தரப்பினருக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. அப்போது தனசேகரன் தரப்பைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிந்து ரவுடி தனசேகரன் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இவ்வழக்கில் சிறையில் உள்ள சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) மற்றும் மதுரை யைச் சேர்ந்த ரகுபதி (39)  ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Tags : gunmen , Tollgate, Bail , gunmen
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில்...