×

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் 2 பேர் கொள்ளையடித்தது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது. 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை மற்றும் ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முகமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 தனிப்படைகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் என்றும் 4 தனிப்படைகள் நகை கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : looters ,Special Forces Organization ,Trichy Lalitha Jewelery 7 Special Forces Organization , 7 Special Forces Organization to capture looters at Trichy Lalitha Jewelery
× RELATED ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 7...