×

பணிக்கன்குப்பம்-மேலிருப்பு தார் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம்- மேலிருப்பு தார் சாலை  உள்ளது. இந்த சாலை 5 மைல் தூரம் கொண்டது. இந்த தார் சாலை தரம் இல்லாததாக போடப்பட்டதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அவ்வழியாக மாளிகம்பட்டு, தாழம்பட்டு, கீழிருப்பு மற்றும் மேலிருப்பு ஆகிய ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் விளையும் விவசாய பொருட்களையும் இந்த சாலை வழியாக எடுத்து செல்கிறார்கள்.

சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பகுதிக்கு 108ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டி தாமதமாக வந்து அடைகிறது. மேலும் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் இந்த சாலையில் செல்ல பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குண்டும் குழியுமாக சாலையை உடனடியாக தார் சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : tar road ,Pamanikkuppam-Melapuram , The people are suffering from rain-fed tar road and rain water
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...