சிவகங்கை: மழை காரணமாக கீழடியில் அகழாய்வை பார்வையிட காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 9மணி முதல் மாலை 5மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அகழாய்வு குழிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான முன்னேச்சரிக்கை பனி நடைபெறுகிறது என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.