×

பிரபல துணிக்கடை விடுதியில் ஹேர்டை குடித்து இளம்பெண் சாவு: தி.நகரில் பரபரப்பு

சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம், மேற்கு செல்ல பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பரமேஸ்வரி (21), சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் கேஷியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக மன உளைச்சல் காரணமாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்த பரமேஸ்வரி, நேற்று முன்தினம் இரவு துணிக்கடையின் விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில், தலைக்கு அடிக்கும் ஹேர்டையை  குடித்து  மயங்கினார். சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த சக ஊழியர்கள், பரமேஸ்வரி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போலீசார், பரமேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Hairdresser ,T Nagar ,celebrity shop , Celebrity Fabric Hostel, Hairdresser, Youngster Death
× RELATED 222 கிலோ வெள்ளி திருடிய ஊழியர் கைது