சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள திரு.வி.க.நகர் (தாங்கல்) மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி வரை இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் எம்.பி.எம். தெரு மயான பூமியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.