சென்னை: தமிழகத்தில் செப்டம்பரில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது என வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் மாதம் இயல்பு அளவான 10 செ.மீ காட்டிலும் அதிகமாக 19 செ.மீ மழை பெய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவு பெய்யும் எனவும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 53 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.