×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பலியான தொழிலாளி உறவினர்கள் முற்றுகை

சென்னை:  வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 22ம் தேதி சுவிட்ச் யார்டில் பணியாற்றி  கொண்டிருந்த எண்ணூரை சேர்ந்த ஜீவானந்தம் (20) என்ற ஒப்பந்த தொழிலாளி படுகாயமடைந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இதனையடுத்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்களும், தொழிலாளர்களும் அனல் மின் நிலையத்தையும், முதன்மை பொறியாளர் அலுவலகத்தையும் நேற்று முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று  போராட்டத்தை  கைவிட்டு அனைவரும் கலைந்து  சென்றனர்.

Tags : Relatives ,Northcentral Analim Station ,victim laborer ,Northcentral Analim , Northcentral Analmin Station, Killed, Worker Relatives, Siege
× RELATED (தி.மலை) தலைமறைவாக இருந்த உறவினர்கள் 3...