இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் நகரின் அருகே நேற்று முன்தினம் மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்கவா மாகாணங்களில் பல்வேறு நகரங்களில் உணரப்பட்டது. இதில் பல பகுதிகளில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இப்பகுதியில் கடந்த 14 ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் இது. இதில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. அதிக சேதத்தை சந்தித்த ஜட்லான் பகுதியில் 11 பேரும், மிர்பூரில் 9 பேரும் இறந்துள்ளனர்.