சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேனர்கள் வைக்கும் அதிமுக வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் தங்கள் கட்சி சார்பில் எப்பொழுதுமே பேனர்கள் வைக்கப்படுவதில்லை எனவும், பேனர்கள் வைப்பதில்லை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவிக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.