திருவள்ளூர்: பொன்னேரியில் மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடத்திய தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் 11 பேரை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவும் வலிறுத்தி வருகின்றனர்.