சென்னை: அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 19,427 ஆசிரியர் நிரந்தர பணியிடங்களாக நியமிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக 19,427 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்காளாக பணியாற்றி வருவோருக்கு தொடர்கால நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளது.