×

தமிழகத்தில் தொழில் தொடங்க துபாயில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

அபுதாபி: தமிழகத்தில் தொழில் தொடங்க துபாயில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தகளில் துபாயை சேர்ந்த நிறுவனங்கள் கையெழுத்திட்டன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த மாதம் 28ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரும் அவருடன் சென்றனர். இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இதையடுத்து கடந்த 1ம் தேதி இரவு லண்டனில் இருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2ம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத் (தொழிலாளர் நலத்துறை), ஆர்.பி.உதயகுமார் (வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை), ராஜேந்திரபாலாஜி (பால்வளத்துறை), தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் நேற்று துபாய் சென்றடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க தங்களது விருப்பத்தினை தமிழக முதலமைச்சரிடம் துபாய் முதலீட்டாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் பிசினஸ் லீடர்ஸ் போரம் (forum) என்ற அமைப்பும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிச்சாமி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி  நாளை சென்னை திரும்பகிறார். இங்கிலாந்து, துபாய் அமெரிக்கா , நாடுகளில் 13 நாட்கள் சுற்று பயணத்தை  முடித்து கொண்டு (10 ஆம் தேதி) நாளை மறுநாள் அதிகாலை  2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

Tags : MoUs ,Palanisamy ,Dubai , Dubai, CM Palanisamy, MoU
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...