×

கோவையில் பிறந்தநாள் கேக் வெட்டி அரிவாளுடன் பேஸ்புக்கில் ‘போஸ்’: மேலும் 3 பேர் கைது

கோவை: கோவையில் கத்தி, அரிவாளுடன் பிறந்தநாள் கேக் வெட்டி போஸ் கொடுத்த மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சூர்ய மகேஸ்வரன் (28). எலக்ட்ரீசியன். இவர் கடந்த மாதம் 30ம் தேதி கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் ெகாண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின்  போது சூர்ய மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் கத்தி, அரிவாளுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். இந்த போட்டோக்களை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வெளியிட்டனர். இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் அதே பகுதியை  சேர்ந்த சுந்தரம் (42), சதீஷ்குமார் (27) ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த சிவானந்தபுரம் மாருதி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்  கனி அமுதன் (36),  சூர்யா மகேஸ்வரன்  விளாங்குறிச்சி ரோடு ராஜரத்தினம் (40) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து  கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கனி அமுதன் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ ஏரியாவில் அடிதடி, மோதல்களில் அவ்வப்போது ஈடுபட்டு  வந்தோம். பிறந்த நாளை கொண்டாடிய போது போட்டோவிற்கு போஸ் தர கத்தி, வீச்சரிவாள் பயன்படுத்தினோம்.  போட்ேடாக்களை நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பியிருந்ேதாம். யாரோ பேஸ்புக்கில் வெளியிட்டதால் வைரலாகி விட்டது.  கைது செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்றனர்.

Tags : Google ,Mathrubhumi , Cut Birthday ,Goa,, arrested , Facebook
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்