×

சென்னையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் 12 ஆயிரம் சிறப்பு கோவிட் சென்டர்

* அத்திப்பட்டில் தனிமைப்படுத்தும் மையம்* மாணவர் விடுதியில் கண்காணிப்பு மையம் * சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்சென்னை: சென்னையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தும் முகாம் 12 ஆயிரம், படுக்கை வசதிகளுடன் அமைப்பு அத்திப்பட்டில் தனிமைப்படுத்தும் (சிறப்பு கோவிட் சென்டர்) மையம் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பர், ஜனவரி மாதம் வரை தொற்று எண்ணிக்கை 500க்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரம் என்று இருந்த நிலையில் 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  இந்நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்கனவே இருந்த தனிமைப்படுத்தல் முகாம்களை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதோ அதை கடந்த 8ம் தேதி முதல் மீண்டும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.  வீட்டில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்கள் அரசு தரப்பில் தயார் செய்துள்ள தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சோதனையின் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். அதற்காக தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி, விக்டோரியா மாணவர் விடுதியில் கொரோனா கண்காணிப்பு மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் முதற்கட்டமாக 15க்கும் மேற்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தும் முகாம்களில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பத்தூர் மண்டலம் அத்திப்பட்டில் தனிமைப்படுத்தும் மையம் தற்போது தயாராகி உள்ளது. இதைப்போன்று தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சென்னையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் 12 ஆயிரம் சிறப்பு கோவிட் சென்டர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Attipat ,Dinakaran ,
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு