×

கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம் : ஓ பன்னீர் செல்வம்

டெல்லி : வறுமை ஒழிப்பு, வறட்சி, விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக  டெல்லியில் மாநில நிதியமைச்சர்அளித்தார் கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நீர் சேமிப்பை நாடு தழுவிய இயக்கமாக அறிவிக்க கோரிக்கை வைத்ததாகவும், காவிரி - கோதாவரி இணைப்புக்கான நிதியை, இந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும்   கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்ததாகவும், கூறினார்.


Tags : houses ,Gaja Storm: O Paneer Wealth , Poverty Alleviation, Drought, O Paneer Wealth, Deputy Chief Minister
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்