×

மதுரையில் மீண்டும் போலீஸ் அத்துமீறல் கர்ப்பிணியை தாக்கினார் எஸ்ஐ: ஜி.ஹெச்சில் உறவினர்கள் முற்றுகை

மதுரை: மதுரை அருகே, கொந்தகை கிராமம் முனியாண்டிபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் மனைவி சித்ரா. இவர் 7 மாத கர்ப்பிணி. கடந்த 18ம் தேதி அப்பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில்  கணவர் காளீஸ்வரனை, போலீஸ் எஸ்ஐ ஜான்சன் கைது செய்ய முயன்றபோது சித்ரா தடுத்துள்ளார். இதில் கோபமடைந்த எஸ்ஐ, கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் சித்ராவிற்கு வயிற்றில் கடும் வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். எஸ்ஐ ஜான்சன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மற்றும் எவிடன்ஸ் தொண்டு அமைப்பினர் நேற்று மதுரை அரசு  மருத்துமனை வாயில் முன்பு, கண்டன வாசகங்களுடனான பதாகைகளை ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே மதுரையில் லத்தியை வீசி போலீஸ் தாக்கியதில் விவேகானந்தகுமார் பலியான நிலையில், மேலும் ஒரு போலீஸ் காரர் தாக்குதலில் கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் காளீஸ்வரன் கூறும்போது, ‘‘கர்ப்பிணியான என் மனைவியை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.



Tags : Madurai , Police,Madurai, SI, GH
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை