×

பழைய துணியுடன் தெரியாமல் வழங்கிய 2 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த பெண் தொழிலாளி

சென்னை: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 163வது வட்டத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் முருகம்மாள் (42). இவர் நேற்று முன்தினம் ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஜெனிதா என்ற பெண் ஐடி ஊழியர், பழைய துணிகள் அடங்கிய பையை முருகம்மாளுக்கு வழங்கி, ‘‘இதில் நல்ல துணிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,’’ என தெரிவித்துவிட்டு சென்றார். வேலை முடிந்தவுடன் அந்த துணிப்பையை முருகம்மாள் பிரித்து பார்த்தபோது, துணிகளுக்கு இடையே ஒரு சிறிய பெட்டியில் 2 சவரன் தங்க செயின் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ஜெனிதாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற முருகம்மாள், துணிப்பைக்குள் இருந்த தங்க செயினை ஜெனிதாவிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை ஜெனிதா பாராட்டினார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Tags : jewelery , Old clothes, 2 shaving jewelry, to the person, handed, female worker
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...