வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் 1,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லவில்லை.