சேலம்: சேலத்தில் பஸ் போர்ட் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் பணிகள் முடிந்த ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்து பிறகு மேடையில் பேசினார். அதேபோல், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர், நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு வந்தவுடன் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்தார். உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது என கூறினார்.