சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணசீட்டு வழங்க ஆள் இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ்., நந்தனம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு வழங்க ஆள் இல்லை. மெட்ரோ நிலைய கட்டுப்பாட்டாளர்களும் பணியில் இல்லாததால் ரயில் எற வந்திருக்கும் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.