திருச்சி: திருச்சி கே.கே நகரில் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் பெண்ணாடம் காவலர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காவலர் தமிழ்செவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவலர் தமிழ்ச்செல்வன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள 3 நாட்களில் தமிழ்ச்செல்வன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.