கரூர்: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என்று பேசிய விவகாரத்தில் கரூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜராகியுள்ளார். உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் நகலை கமல் பெற்றுக்கொண்டுள்ளார். கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலர் அளித்த புகாரின் கீழ் கமல்ஹாசன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.