சென்னை : வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மனு அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நேரத்தில் வன்முறையில் ஈடுபட அதிமுகவினர் திட்டமிடுகின்றனர். அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது என்று சதி நடக்கிறது. ஆகையால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வெற்றிவேல் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார்.