×

வாலிபர் மயங்கி விழுந்து சாவு

அண்ணாநகர்: அயனாவரத்தை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணன் (34) என்பவர், தனது உறவினர் ராம் சரண் என்பவருடன் நேற்று திருமங்கலம் பார்க் சாலையில் உள்ள ஓஎன்ஜிசி குடியிருப்புக்கு சென்றார்.  அங்கு, குடியிருப்பு வளாகத்தில் உள்ள 10 அடி கொண்ட தண்ணீர் தொட்டியை இருவரும் சுத்தம் செய்தனர். அப்போது சாய் கிருஷ்ணன் மட்டும் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தார். ராம் சரண் வெளியே சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சாய் கிருஷ்ணன் மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஆம்புலன்சை வரவழைத்து பரிசோதித்தபோது சாய் கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த  திருமங்கலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : young man, falls ,dies
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...