×

அயோத்தி வழக்கு இன்று விசாரணை

புதுடெல்லி:  உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கடந்த மார்ச் 8ம் தேதி விசாரித்த 5  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆராய, மத்தியஸ்தர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும்  கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ayodhya ,case trial , Ayodhya , trial ,today
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...