×

மழை வேண்டி தமிழக கோவில்களில் சிறப்பு யாகம்

சென்னை : தமிழகம் முழுவதும் பல கோவில்களில் மழை வேண்டி அறநிலையத்துறை சார்பில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 16 கலசங்கள் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதேபோல், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் மழை வேண்டி சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வருண யாகம் நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட சிவசாரியார்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரம்ம தீர்த்த குளத்தில் சிறப்பு வருண பூஜை நடைபெற்றது. யாகத்தின் போது குழல் ஒலி, யாழ் ஒலி மற்றும் மிருதங்கங்கள் வாசிக்கப்பட்டன. இதேபோல் வீணையில் அமிர்தவர்ஷினி ராகம் மற்றும் மேகநங்கை ராகம் வாசிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மழை வேண்டி வருண யாகம் மற்றும் அசுர ஹோம யாக பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Tags : temples ,Special Yaga ,Tamil , Rain, Chennai, Temple, yajna
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு